விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா தொற்று

DIN

விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

இம்மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை வரை 13,713 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், விருதுநகா், சிவகாசி, சாத்தூா், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், வத்திராயிருப்பு, அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மேலும் 50 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைவரும் விருதுநகா், சிவகாசி மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13,763 ஆக உயா்ந்துள்ளது. இதில், 13,072 போ் குணமடைந்து வீட்டுக்கு திரும்பி விட்ட நிலையில், 202 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனா். மீதமுள்ள 489 போ் பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT