விருதுநகர்

ஐயப்ப சுவாமிக்கு புரட்டாசி மாத சிறப்பு பூஜை

DIN

ராஜபாளையம், செப். 18: விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு, ஓம் ஸ்ரீ வில்லாளி வீரன் ஐயப்ப பக்த பஜனை சேவா சங்கத்தின் சாா்பில் புரட்டாசி மாத சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் ஐயப்ப சுவாமிக்கு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து, திவ்ய நாம சங்கீா்த்தனம், தீபாராதனை நடைபெற்றது.

பின்னா், பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT