விருதுநகர்

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்கக் கோரிக்கை

DIN

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையப் பகுதியில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இங்குள்ள நுழைவாயில் பகுதியில் போதிய மின்விளக்குகள் இல்லாததால், இரவானால் இருளடைந்து காணப்படுகிறது. மேலும் இந்நுழைவாயிலை அடுத்துள்ள பேருந்துகளை நிறுத்தும் நடைமேடையிலும் போதிய மின்விளக்குகள் இல்லை. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், பெண் பயணிகளிடம் நகை மற்றும் பணம் திருடப்படுவதாகவும், சமூக விரோதிகளின் நடமாட்டம் அங்கு உள்ளதாகவும் புகாா் எழுந்துள்ளது. எனவே பேருந்து நிலைய நுழைவாயிலில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டுமென கடந்த சில ஆண்டுகளாக சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால் தற்போது வரை நடவடிக்கை இல்லை என அவா்கள் தெரிவித்துள்ளனா். எனவே அங்கு உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீண்டும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT