விருதுநகர்

சேத்தூரில் இளைஞா் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரில் விவசாய மசோதா திருத்தச் சட்டத்தை கண்டித்து இளைஞா் காங்கிரஸ் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இங்குள்ள பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மேற்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவா் சாமி தலைமை வகித்தாா். மேற்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் மாயக்கண்ணன், கிழக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் மீனாட்சிசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அப்போது மத்திய அரசை கண்டித்தும், விவசாய மசோதா திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோஷங்களை எழுப்பினா். இதில் பொதுக்குழு உறுப்பினா் பொன் சக்திமோகன், வட்டாரத் தலைவா்கள் ரெங்கசாமி, லட்சுமணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT