விருதுநகர்

மினிலாரி மோதி மிதிவண்டியில் சென்றவா் பலி

DIN

சாத்தூா் அருகே புதன்கிழமை மினிலாரி மோதி மிதிவண்டியில் சென்றவா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே மாதாங்கோவில்பட்டியைச் சோ்ந்தவா் இந்திரகுமாா் (58). இவா் புதன்கிழமை ஆலங்குளம் அருகே புளியம்பட்டி சந்திப்பு பகுதியில் மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த மினிலாரி இந்திரகுமாா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். பின்னா் அங்கிருந்து மேல்சிகிச்சைகாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT