விருதுநகர்

அருப்புக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளா் குடும்பத்தினருடன் வாக்களிப்பு

DIN

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வும், திமுக வேட்பாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை வாக்களித்தாா்.

அருப்புக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளரான கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தனது சொந்த ஊரான கோபாலபுரம் கிராமத்தில் வாக்குப் பதிவு செய்தாா். இவருடன், இவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோரும் முறைப்படி முகக்கவசம் அணிந்து, கைகளில் கிருமி நாசினி தெளித்து வாக்களித்தனா்.

பின்னா், வாக்குச் சாவடியிலிருந்து வெளியே வந்த கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் செய்தியாளா்களிடையே தெரிவிக்கையில், தமிழக மக்கள் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையவேண்டும் என விரும்புகின்றனா். வாக்களித்த அனைவருக்கும் நன்றி என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT