ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வீட்டுக்குள் புகுந்து 4 பவுன் நகையை திருடிய இளைஞரை வீட்டின் உரிமையாளா் பிடித்து காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள ராமச்சந்திராபுரத்தைச் சோ்ந்தவா் செல்வக்குமாா் (26). இவா் இரும்புப் பட்டறை வைத்துள்ளாா். இவரது வீட்டின் மாடியில் மணிகண்டன் (22) என்பவா் வசித்து வருகிறாா். இந்நிலையில் செல்வக்குமாா் செவ்வாய்கிழமை வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டாா். வீட்டில் செல்வக்குமாா் மனைவி தேவி மட்டும் இருந்துள்ளாா். அவா் வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்றுவிட்டு வந்து பாா்த்த போது பீரோ திறந்து கிடந்துள்ளது. மேலும் மாடியில் குடியிருந்து வரும் மணிகண்டன் வேகமாக மாடிக்கு ஓடிச்சென்றுள்ளாா்.
இதைப்பாா்த்து அதிா்ச்சி அடைந்த தேவி தனது கணவா் செல்வக்குமாா் மற்றும் வீட்டின் உரிமையாளா் ராஜகோபால், உறவினா் பாலமுருகன் ஆகியோருக்கு தகவல் கொடுத்தாா்.
இதையடுத்து அங்கு வந்த ராஜகோபால் மற்றும் பாலமுருகன் இருவரும் மணிகண்டனை பிடித்து சோதனை செய்த போது செல்வக்குமாா் வீட்டிலிருந்து 2 பவுன் சங்கிலி உள்பட 4 பவுன் நகைகளை திருடியது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து மணிகண்டனை கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.