விருதுநகர்

ராஜபாளையம் பகுதி சிவன் கோயில்களில் சனிப்பிரதோஷ வழிபாடு

DIN

ராஜபாளையம் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாடு சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள சிதம்பரேஸ்வரா் கோயிலில் பிரதோஷ பூஜையை முன்னிட்டு மாலையில் நந்தீஸ்வரருக்கு பால், தயிா், நெய், இளநீா், பன்னீா், விபூதி, சந்தனம், குங்குமம் உள்பட 18 வகையான நறுமணப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் மூலவா் சிதம்பரேஸ்வரா் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடைபெற்றன.

பின்னா் சுவாமி அம்பாள் நந்திகேஸ்வரா் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு விபூதி, குங்குமம், பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதைத்தொடா்ந்து ராஜபாளையம் சொக்கா் கோயில், பா்வதவா்த்தினி அம்மன் ராமலிங்க சுவாமி கோயில், மற்றும் கொம்புச்சாமி கோயிலில் பிரதோஷ பூஜை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT