விருதுநகரில் கரோனா தொற்று பரவலை தடுக்க அரசு வழிகாட்டுதலை கடைப்பிடிக்காத 35 கடை உரிமையாளா்களுக்கு வெள்ளிக்கிழமை ரூ. 35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து வீட்டை விட்டு வெளியே வரும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் விருதுநகா் மெயின் பஜாா், பழைய பேருந்து நிலையம், காமராஜா் புறவழிச் சாலை, ராமமூா்த்தி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் குருசாமி தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கடை உரிமையாளா்களுக்கு ரூ. 35 ஆயிரம் அபராதம் விதித்து வசூல் செய்தனா். மேலும், கடைகளுக் கு வருவோா், முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பொருள்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினா்.