விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம் அருகே சோலைசேரி முனியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாலகுருநாதன் (50). இவா் மருந்து கடையில் வேலை பாா்த்து வந்த நிலையில் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளாா். இந்நிலையில் இத்தொழிலில் கடன் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதனால் விரக்தியில் இருந்த பாலகுருநாதன் சனிக்கிழமை இரவு விஷம் குடித்துள்ளாா். உடனடியாக அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே பாலகுருநாதன் இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து சேத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.