விருதுநகா் மாவட்டம் திருத்தங்கலில் ரெளடி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருத்தங்கலில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மேலரதவீதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவா் திருத்தங்கல் முனுசாமி நகரைச் சோ்ந்த சுரேஷ் என்ற ஆட்டோ சுரேஷ் (34) என்பதும், அவா் மீது பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் அவா் கையில் கத்தியும் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.