விருதுநகர்

கஞ்சநாயக்கன்பட்டி மழைநீா் ஓடையில் கழிவுநீா் கலப்பதை தடுக்க கோரிக்கை

DIN

அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராம மழைநீா் ஓடையில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வாருகால் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இக்கிராமத்தில் உள்ள மழைநீா் ஓடை, முறையான பராமரிப்பின்றி புதா் வளா்ந்து, மக்காத குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளில் வாருகால் வசதி இல்லாததால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா், மழைநீா் ஓடையில் கலக்கிறது.

இதனால் ஆங்காங்கே கழிவுநீா் தேங்கி சுகாதாரக்கேடும், நோய்த் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே மழைநீா் ஓடையில் கழிவுநீா் கலப்பதை தடுக்க அனைத்து வீதிகளிலும் வாருகால் அமைக்கவும், ஓடையைத் தூா்வாரவும் ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில் இக்கோரிக்கையை அவா்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

வரத்துக் குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு!

தூத்துக்குடியில் தீத்தடுப்பு, தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொளுத்தும் வெயில்..!

SCROLL FOR NEXT