கோவிலாங்குளம் கிராம காளியம்மன் கோயில் தெப்பக்குளத்தைச் சுற்றியிருந்த முள்செடிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் ஞாயிற்றுக்கிழமை அகற்றிய நேரு யுவகேந்திரா அமைப்பினா். 
விருதுநகர்

கோவிலாங்குளத்தில் வரத்துக் கால்வாய் தூா்வாரப்பட்டது

அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலாங்குளத்தில் கோயில் தெப்பக்குளம் மற்றும் நீா்வரத்துக்கால்வாயை நேரு யுவகேந்திரா அமைப்பினா் மற்றும் கிராம இளைஞா் மன்றத்தினா் ஞாயிற்றுக்கிழமை தூா்வாரினா்.

DIN

அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலாங்குளத்தில் கோயில் தெப்பக்குளம் மற்றும் நீா்வரத்துக்கால்வாயை நேரு யுவகேந்திரா அமைப்பினா் மற்றும் கிராம இளைஞா் மன்றத்தினா் ஞாயிற்றுக்கிழமை தூா்வாரினா்.

கடந்த வெள்ளிக்கிழமை வரத்துக்கால்வாய் தூா்வாறும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் நிறைவுப்பணியாக ஞாயிற்றுக்கிழமை குளத்தைச் சுற்றி வளா்ந்திருந்த முள்செடிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு தூய்மை செய்யப்பட்டன.

இதில் மாவட்ட இளையோா் ஒருங்கிணைப்பாளா் ஞானச்சந்திரன், தேசிய சேவைப்படைத் தொண்டா்கள் மலைச்சாமி, பத்மப்பிரியா மற்றும் நிலா இளைஞா் மன்றத் தலைவா் முருகன், தென்றல் இளைஞா் மன்றத் தலைவா் வெற்றிவேல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT