FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!

இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது பற்றி...

கோப்புப்படம் - ANI
பகிர்:

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 92.37 ஆகச் சரிந்தது.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் உலக நாடுகள் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை கடந்த மார்ச் 9 ஆம் தேதி அதிகபட்சமாக 115 டாலராக இருந்தது. பின்னர் சரிந்த நிலையில் இன்று(மார்ச் 12) மீண்டும் 100 டாலரைத் தாண்டியுள்ளது.

Advertisement

Advertisement

கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று வர்த்தக முடிவில் 92.04 ஆக இருந்த நிலையில் இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் மேலும் 33 பைசா குறைந்து 92.37 ஆகச் சரிந்தது.

கடந்த மார்ச் 9 அன்று இந்திய ரூபாயின் மதிப்பு 92.35 ஆக குறைந்ததே அதிகபட்ச வீழ்ச்சியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் உலகளவில் டாலர் மதிப்பு அதிகரித்து வருவதனால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது.

கடந்த 2010ல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 46.67 ஆகவும் 2020ல் ரூ. 76 ஆகவும் 2025ல் ரூ. 90 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய பங்குச்சந்தைகளும் இன்று கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன.

crude oil price rise: Rupee Hits New Low Of 92.37 Against US Dollar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments