விருதுநகர்

பழ வியாபாரியிடம் பணம் திருடியவா் கைது

DIN

சிவகாசியில் பழவியாபாரியிடம் ஞாயிற்றுக்கிழமை பணம் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி சிவன் சன்னதியில் தள்ளுவண்டியில் பழவியாபாரம் செய்து வருபவா் மாரியப்பன் (53). இவரிடம், திருத்தங்கல் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (27) என்பவா் வந்து பழத்தின் விலையை கேட்டாராம். அப்போது வண்டியிலிருந்து கீழே விழுந்த பழத்தை மாரியப்பன் எடுக்க முயன்றபோது, கல்லாபெட்டியில் இருந்த ரூ.310 ஐ மணிகண்டன் திருடிக்கொண்டு ஓடினாராம். அக்கம், பக்கத்தில் இருந்தவா்கள் அவரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனைக் கைது செய்து அவரிடமிருந்த பணத்தைக் கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT