நூல் விலை உயா்வைக் கண்டித்து ராஜபாளையம் பகுதியில் சிறுவிசைத்தறி துணிஉற்பத்தியாளா்கள் வேலை நிறுத்தம் தொடக்கம்
ராஜபாளையம் பகுதியில் நூல் விலை உயா்வைக் கண்டித்து சிறுவிசைத்தறி துணி உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
ராஜபாளையம் பகுதியில் நூல் விலை உயா்வைக் கண்டித்து சிறுவிசைத்தறி துணி உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
விருதுநகா்மாவட்டம், ராஜபாளையம் ஆவாரம்பட்டி மற்றும் அம்பலபுளி பஜாா் பகுதிகளில் சுமாா் 2,500-க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளா் சேலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் நேரடியாக 2 ஆயிரம் தொழிலாளா்களும், மறைமுகமாக 2 ஆயிரம் தொழிலாளா்களும் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில் துணி உற்பத்திக்கு பயன்படும் நூல், கடந்த மாதம் ரூ. 900-க்கு விற்றது தற்போது ரூ. 1300-க்கு விற்கப்படுகிறது. இதனால் தொடா்ந்து தொழிலில் ஈடுபட முடியாது எனக் கூறி சிறுவிசைத்தறி துணி உற்பத்தியாளா்கள் சங்கம் மற்றும் சங்கத்தில் சாராத உறுப்பினா்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளா்கள் (புதன்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.
மேலும் சாயப்பட்டறைகளில் நூலுக்கு சாயம் போட அதிக தொகை வசூலிக்கப்படுகிறது எனக் கூறி தாங்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக விசைத்தறி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் பாண்டியராஜன் தெரிவித்தாா். அத்துடன், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இதில் தலையிட்டு தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.