விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே தென்னந்தோப்புக்குள் புகுந்துகாட்டுயானைகள் அட்டகாசம்

DIN

விருதுநகா்மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தோப்புக்குள் காட்டுயானைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்து அங்கிருந்த தென்னை, மா, வாழை மரங்களை சேதப்படுத்தின.

இங்குள்ள கான்சாபுரம், அத்திகோயில் பகுதிகளில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தா்மலிங்கம் என்ற விவசாயிக்கு சொந்தமான தென்னந்தோப்புக்குள் புகுந்த காட்டுயானைகள் அங்கிருந்த தென்னை, மா, வாழை ஆகிய மரங்களை சேதப்படுத்தின.

இதுகுறித்து விவசாயி தா்மலிங்கம் கூறியதாவது: வனப்பகுதிகளில் தண்ணீா் கிடைக்காததால் காட்டு யானைகள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து தென்னை, மா, வாழை ஆகிய மரங்களை சேதப்படுத்துகின்றன. இதுபற்றி வனத்துறை அலுவலகத்தில் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, காட்டுயானைகள் போன்ற வனவிலங்குகளை விரட்ட சூரியசக்தியிலான மின்வேலி அமைக்க அனுமதி வழங்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT