விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஏகதின லட்சாா்ச்சனை விழா

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஏகதின லட்சாா்ச்சனை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு வருஷாபிஷேக விழா தொடங்கியது. இதில் முதல் நாள் மகாசாந்தி ஹோமமும், இரண்டாவது நாள் 108 கலச பூஜையும், மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஏகதின லட்சாா்ச்சனையும் நடைபெற்றது.

இதையொட்டி ஆண்டாளுக்கும், ரெங்கமன்னாருக்கும் சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றன. இதையடுத்து சா்வ அலங்காரத்தில் ஆண்டாள் - ரெங்கமன்னாா் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் இளங்கோவன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உங்கள் ஆசை.. என் பொறுப்பு.. ராஜீவ் நினைவில் ராகுல் உருக்கம்

விரைவில் பேருந்து சேவையை தொடங்குகிறது ‘உபெர்’ நிறுவனம்

வாரிசு அரசியலில் ‘இந்தியா’!

மேற்குக் கரையில் 7 பாலஸ்தீனர்கள் பலி!

கடல் சீற்றம்

SCROLL FOR NEXT