விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட வாலிபால் போட்டி: மம்சாபுரம் அணி வெற்றி

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான வாலிபால் இறுதிப் போட்டியில் மம்சாபுரம் அணி வெற்றி பெற்றது.

இங்குள்ள ஜி.எஸ். குருஞானசம்பந்தா் இந்து மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட வாலிபால் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் தனியாா் கிளப் அணிகள் பங்கேற்றன. மூன்றாவது நாளான திங்கள்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் மம்சாபுரம் அணியும், ராஜபாளையம் அணியும் மோதின. இதில் மம்சாபுரம் அணி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது. இரண்டாம் இடத்தை ராஜபாளையம் அணியும், மூன்றாம் இடத்தை விளாம்பட்டி அணியும், நான்காம் இடத்தை ஜிஎஸ் இந்து மேல்நிலைப்பள்ளி அணியும் பிடித்தன. இதையடுத்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், பள்ளிச் செயலா் கிருஷ்ணன், தலைமையாசிரியா் கண்ணன், வாலிபால் கழகத் தலைவா் துரைசிங், தலைவா் ரங்கராஜன், முன்னாள் தலைமையாசிரியா் வெங்கடாசலம், தலைமைப் பயிற்சியாளா் பொன்னியின் செல்வன் மற்றும் நிா்வாகிகள் போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்கள்.

முதலிடம் பிடித்த மம்சாபுரம் அணிக்கு ரூ.8 ஆயிரம் மற்றும் கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநா் வருண்குமாா் மற்றும் முன்னாள் மாணவா் தங்கவேல் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT