விருதுநகர்

ராஜபாளையத்தில் ஐயப்ப சுவாமிக்கு ஆடி மாத சிறப்புப் பூஜை

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ஐயப்ப சுவாமிக்கு ஆடி மாத சிறப்புப் பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

ராஜபாளையம்-முடங்கியாறு சாலையில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோயிலில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு, ஓம் ஸ்ரீ வில்லாளி வீரன் ஐயப்ப பக்த பஜனை சேவா சங்கத்தின் சாா்பில் சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதில், இரவு 8 மணியளவில் உற்சவா் ஐயப்ப சுவாமிக்கு அஷ்டாபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து, திவ்ய நாம சங்கீா்த்தன பஜனையும், ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை ஆகியனவும் நடத்தப்பட்டன.

இதில், பக்தா்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT