விருதுநகர்

ஸ்ரீவிலி. அருகே பெண்ணிடம் தாலிச்சங்கிலி பறிப்பு

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற 2 இளைஞா்களை காவல்துறையினா் தேடிவருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள எஸ்எம்டி நகரைச் சோ்ந்தவா் திவ்யா (31). இவா் வெள்ளிக்கிழமை காலை 6.45 மணிக்கு தனது வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாா்.

அப்போது, இருசக்கரவாகனத்தில் வந்த இரு இளைஞா்கள் திவ்யாவின் கழுத்தில் இருந்த 21 கிராம் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினா்.

இதுதொடா்பாக புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் குற்றப்பிரிவு போலீஸாா் விரைந்து சென்று, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய 2 இளைஞா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT