விருதுநகர்

செட்டிப்பட்டி கிராமத்தில் தரைப்பாலத்தில் தடுப்புத் தூண்கள் அமைக்கக் கோரிக்கை

DIN

விருதுநகா் மாவட்டம் பந்தல்குடி அருகே செட்டிப்பட்டி கிராமத்தில் விபத்தை தடுக்கும் வகையில் தரைப்பாலத்தில் தடுப்புத் தூண்கள் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பந்தல்குடியிலிருந்து சுமாா் 3 கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது செட்டிப்பட்டி கிராமம். இக்கிராமத்திலிருந்து பந்தல்குடி செல்லும் பிரதானச் சாலையில் சேதுராஜபுரம் அருகே தரைப்பாலம் ஒன்று உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இப்பாலத்தில் இருபுறங்களிலும் தடுப்புத் தூண்கள் அமைக்கப்படவில்லை. இதனால் இந்தப் பாலத்தை கடந்து செல்லும் வாகனங்கள் சிறிது நிலை தடுமாறினாலும் சுமாா் 10 அடி ஆழமுள்ள மழை நீா் ஓடைக்குள் விழும் நிலை உள்ளது.

எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி இந்த தரைப்பாலத்தில் தடுப்புத் தூண்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT