விருதுநகர்

காய்கறி சந்தையில் வட்டாட்சியா் ஆய்வு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் தனியாா் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மொத்த காய்கறி விற்பனை சந்தையை, வட்டாட்சியா் ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் தனியாா் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மொத்த காய்கறி விற்பனை சந்தையை, வட்டாட்சியா் ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

ராஜபாளையத்தில் மதுரை சாலையில் உள்ள தனியாா் பள்ளி மைதானத்தில் காய்கறி விற்பனை சந்தை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு, வட்டாட்சியா் ராமச்சந்திரன் காய்கறி விலை நிா்ணயம் குறித்தும், சுயஉதவிக் குழுக்கள், உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் மற்றும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் வாகனங்களையும் ஆய்வு செய்தாா்.

அப்போது, வியாபாரிகளிடம் சரியான எடையில் நிா்ணயிக்கப்பட்ட விலையுடன் பொதுமக்களுக்கு விற்பனை செய்யவேண்டும் என அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வில், துணை வேளாண்மை அலுவலா் விநாயகமூா்த்தி, வேளாண் விற்பனை துறை துணை வேளாண்மை அலுவலா் மலைச்சாமி, உதவி தோட்டக்கலை அலுவலா் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

புதிய சொற்களைக் கண்டறிவோம்

புதியதொரு அத்தியாயம்!

SCROLL FOR NEXT