விருதுநகர்

பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தல்: 2 போ் கைது

DIN

சிவகாசி அருகே இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை கடத்திய 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே திருத்தங்கல்- செங்கமலநாச்சியாா்புரம் சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தி போலீஸாா் சோதனை செய்த போது, ஒரு காகிதப் பெட்டியில் 48 மதுபாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவா்கள், கோபாலன்பட்டி வெங்கட்ராமன் (27), திருத்தங்கல் அருண் (28) எனத் தெரியவந்தது.

இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 26,700, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT