மாற்றுத்திறனாளிகளுக்கு  இலவச அரிசி, மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் 
விருதுநகர்

அருப்புக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச அரிசி, மளிகைப்பொருட்கள் வழங்கிய மாவட்ட எஸ்.பி.

அருப்புக்கோட்டை பாவடித்தோப்பு பகுதியில் புதன்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு  இலவச அரிசி,மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் நேரில் வழங்கினார்.

DIN

அருப்புக்கோட்டை பாவடித்தோப்பு பகுதியில் புதன்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு  இலவச அரிசி, மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் நேரில் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற  மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச அரிசி மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்புக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மனோகரன் தலைமை வகித்தார்.

அருப்புக்கோட்டை முன்னாள் நகர்மன்றத்தலைவர் சிவப்பிரகாசம்,மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு, நகரச்செயலாளர் ஏ.கே.மணி,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கச் செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது சுமார் 50க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட எஸ்.பி.மனோகரன் நிவாரணப்பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை நேரில் வழங்கினார். உடன் அருப்புக்கோட்டை காவல்துணைக் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ், நகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜபுஷ்பா,காவல்துணை ஆய்வாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் நேரில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லவ் தீம்... நிஹாரிகா ரய்ஸாதா!

துபை விமான காட்சியில் எரிந்து விழுந்த இந்திய தேஜஸ் விமானம்!

பெண்ணாகப் பிறப்பது பெருந்தவம்... அனுக்ரீத்தி வாஸ்!

விமான விபத்து: துபையில் கண்காட்சி மீண்டும் துவங்கியது!

டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் நாயகனாகும் பட டைட்டில் டீசர்! ரஜினிகாந்த் வெளியிட்டார்!

SCROLL FOR NEXT