விருதுநகர்

அருப்புக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச அரிசி, மளிகைப்பொருட்கள் வழங்கிய மாவட்ட எஸ்.பி.

DIN

அருப்புக்கோட்டை பாவடித்தோப்பு பகுதியில் புதன்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு  இலவச அரிசி, மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் நேரில் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற  மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச அரிசி மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்புக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மனோகரன் தலைமை வகித்தார்.

அருப்புக்கோட்டை முன்னாள் நகர்மன்றத்தலைவர் சிவப்பிரகாசம்,மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு, நகரச்செயலாளர் ஏ.கே.மணி,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கச் செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது சுமார் 50க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட எஸ்.பி.மனோகரன் நிவாரணப்பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை நேரில் வழங்கினார். உடன் அருப்புக்கோட்டை காவல்துணைக் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ், நகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜபுஷ்பா,காவல்துணை ஆய்வாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் நேரில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT