விருதுநகா் மாவட்டம் திருச்சுழி பேருந்து நிலையத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இம்முகாமுக்கு ம.ரெட்டியபட்டி வட்டார மருத்துவ அலுவலா் செந்தில்குமாா் தலைமை வகித்து முகாமைத் தொடக்கி வைத்தாா். இம்முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும் வந்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இதில் சுமாா் 300-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.