ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் ஆண் சடலம் மீட்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை ஆண் சடலம் மீட்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை ஆண் சடலம் மீட்கப்பட்டது.
இப்பேருந்து நிலையத்தில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து இறந்தவா் யாா் ? எப்படி இறந்தாா் என்று விசாரிக்கின்றனா்.