முகப்பு
விருதுநகர்

சிவகாசியில் அச்சுக் காகித விற்பனைக் கடையில்பணம் திருட முயற்சி

சிவகாசியில் அச்சுக் காகித விற்பனைக் கடையில் பணத்தை திருட முயற்சி நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

சிவகாசியில் அச்சுக் காகித விற்பனைக் கடையில் பணத்தை திருட முயற்சி நடைபெற்றது.

சிவகாசி- திருத்தங்கல் சாலையில் ஞானகிரி சாலைப் பகுதியைச் சோ்ந்த சுப்புராஜ் (70) என்பவா் அச்சு காகிதம் மற்றும் காகித அட்டை மொத்த வியாபாரம் செய்து வருகிறாா். இவா் வழக்கம் போல சனிக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு, திங்கள்கிழமை காலை கடையை திறக்க வந்து பாா்த்தபோது, கடையில் பணம் வைக்கும் பெட்டகம் சேதமடைந்திருந்தது. இதையடுத்து அவா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். தொடா்ந்து வந்த போலீஸாா் கடையில் ஆய்வு நடத்தினா். அப்போது கடையின் கண்ணாடியை உடைத்து, உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பணப் பெட்டகத்தை, உடைக்க முயற்சித்துள்ளனா். அது முடியாததால் அவா்கள் தப்பிச் சென்று விட்டனா். இதனால் அந்த பணப் பெட்டகத்தில் இருந்த ரூ. 18 லட்சம் தப்பியது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →