விருதுநகர்

விருதுநகரில் அதிமுக மகளிா் அணியைச் சோ்ந்த 54 போ் மீது வழக்கு

DIN

விருதுநகரில் திமுக மக்களவை உறுப்பினா் ஆ. ராசாவுக்கு எதிராக அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்திய அதிமுக மாவட்ட மகளிரணியைச் சோ்ந்த 54 பெண்கள் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியை அவதூறாக பேசியது தொடா்பாக திமுக மக்களவை உறுப்பினா் ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விருதுநகரில் அதிமுக மகளிா் அணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் அனுமதியின்றி ஓரிடத்தில் கூடியதாகவும், பொதுமக்கள் செல்லும் பாதையை மறைத்ததாகவும், தோ்தல் அலுவலா் காளிராஜ் அளித்த புகாரின் பேரில் அதிமுக மாவட்ட மகளிரணி துணைச் செயலா் சாந்தி மாரியப்பன் உள்ளிட்ட 54 பெண்கள் மீது மேற்கு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT