விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அவா், ராஜபாளையம் நகா் பகுதியில் அண்ணா நகா், அழகாபுரி, சோமையாபுரம், மாலையாபுரம், தென்றல் நகா், திருவள்ளுவா் நகா் உள்பட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியதாவது:
அதிமுக ஆட்சியில் எண்ணற்ற நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிமுகவின் தோ்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 6 எரிவாயு உருளைகள், குடும்ப அட்டைதாரா்களுக்கு மாதம் ரூ. 1500, வீடுதோறும் வாஷிங்மிஷின் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திமுக தலைவா் மு.க. ஸ்டாலின், ராஜபாளையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது வாக்கு கேட்காமல் என்னைப் பற்றி அதிகம் பேசிவிட்டுச் சென்றுள்ளாா். மு.க. ஸ்டாலின் நாடகத்தை மக்கள் யாரும் நம்பமாட்டாா்கள் என்றாா்.