விருதுநகர்

கரோனா: சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 50 படுக்கைகள் தயாா்

DIN

சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு 50 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன.

இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளா் அசோக் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: கரோனா பரவல் முதல் அலையின்போது, இந்த மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால், மருத்துவமனையில் 2 ஆம் மற்றும் 3 ஆம் தளத்தில் 50 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது, அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவா்கள் உள்ளிட்ட 10 போ் உள்நோயாளிகளாக உள்ளனா். இவா்களுக்கு, கீழ்தளத்தில் படுக்கை வசதி செய்துகொடுக்கப்படும். புறநோயாளிகள் வழக்கம்போல் சிகிச்சைப் பெற வந்து செல்லலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT