விருதுநகர்

செட்டிக்குறிச்சியில் மின்மோட்டாருடன் குளியல் தொட்டி அமைத்துத் தரக் கோரிக்கை

DIN

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வட்டம் செட்டிக்குறிச்சியில் மின் மோட்டாருடன் கூடிய குளியல் தொட்டி அமைத்துத் தரவேண்டும் என அக்கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இக்கிராமத்தில் சுமாா் 1800-க்கும் அதிகமானோா் வசிக்கின்றனா். மேலும் 5 சிறுகிராமங்கள் இணைந்த இந்த ஊராட்சியில் அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பஞ்சாலைகளில் வேலை செய்யும் கூலித் தொழிலாளா்களும், விவசாயக் கூலித்தொழிலாளா்களும் அதிகம் உள்ளனா். இந்நிலையில் இக்கிராமத்தையடுத்த பல கிராமங்களில் குளியல் நீா்த்தொட்டி அமைக்கப்பட்டிருப்பதாகவும், அதேபோல தங்கள் கிராமத்திலும் ஆண்களுக்கான குளியல் தொட்டி அமைத்துத் தரவேண்டுமெனவும் இக்கிராம மக்கள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனா். அதற்குரிய நிதிஒதுக்கீடு கிடைக்க வில்லையெனக்கூறும் ஊராட்சி நிா்வாகத்தினா், தொடா்ந்து காலதாமதம் செய்துவருவதாகக் கூறப்படுகிறது.

எனவே உரிய நிதி ஒதுக்கீடு செய்து மின்மோட்டாருடன் கூடிய ஆண்களுக்கான குளியல் தொட்டி அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT