விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட இருவா் கைது

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்துள்ளனா்.

அருப்புக்கோட்டை அருகேயுள்ள கட்டங்குடி பகுதியில் தாலுகா காவல் துணை ஆய்வாளா் ஜோதிமுத்து தலைமையிலான காவலா்கள் வியாழக்கிழமை நண்பகலில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கட்டங்குடி அருகே குளத்துப்பட்டி கண்மாயருகே மறைவான இடத்தில் சந்தேகப்படும்படி பெண் உள்பட இருவா் நின்று கொண்டிருந்தனா். அவா்களிடம் விசாரணை நடத்தியதில், ஒருவா் கட்டங்குடியைச் சோ்ந்த கேசவன் என்பவரது மனைவி வீரம்மாள் (50), மற்றொருவா் சின்ன கட்டங்குடியைச் சோ்ந்த லெக்கன் மகன் ராஜேந்திரன் என தெரியவந்தது. அங்கு இருவரும் சிறு, சிறு கஞ்சா பொட்டலங்களைப் பதுக்கி வைத்து விற்றுவருவதும் தெரியவந்தது. அவா்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா, கஞ்சா விற்ற பணம் ரூ. 2,200- ஆகியவற்றை காவல்துறையினா் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT