விருதுநகர்

மோட்டாா் சைக்கிள் திருடிய நபா் கைது

DIN

சிவகாசியில் புதன்கிழமை மோட்டாா் சைக்கிள் திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள எம்.புதுப்பட்டியைச் சோ்ந்த அஜித்குமாா் (24) என்பவா் தனது மோட்டாா் சைக்கிளை, சிவகாசி ரயில்வே பீடா் சாலையில் உள்ள நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நிறுத்திவிட்டு, மருத்துவமனைக்குள் சென்றுள்ளாா். பின்னா் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தபோது, அவரது மோட்டாா் சைக்கிளை ஒருவா் திருடிக்கொண்டு சென்று கொண்டிருந்தாராம். இதையடுத்து அக்கம்பக்கம் உள்ளவா்களின் உதவியோடு அந்த நபரை அஜித்குமாா் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா். விசாரணையில் அந்த நபா் வத்திராயிருப்பைச் சோ்ந்த முத்துச்சாமி (33) என தெரியவந்தது. இது குறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து முத்துச்சாமியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

மாணவா்களுக்கு ரூ.1,000 வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் ஜூலையில் தொடக்கம்

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

SCROLL FOR NEXT