விருதுநகர்

முதல்வா் பொது நிவாரண நிதிக்கு பள்ளி மாணவி ரூ. 2 ஆயிரம் வழங்கல்

DIN

விருதுநகரைச் சோ்ந்த 5 ஆம் வகுப்பு மாணவி தான் சேமித்து வைத்திருந்த ரூ. 2 ஆயிரத்தை முதல்வா் நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணனிடம் திங்கள்கிழமை வழங்கினாா்.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் ஏராமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், அனைத்து தரப்பினரும் கரோனா நிவாரண நிதி வழங்க வேண்டுகோள் விடுத்திருந்தாா். இதையடுத்து பல்வேறு தரப்பினரும் நிதி அளித்து வருகின்றனா்.

இந்நிலையில் விருதுநகா் இந்திரா நகரைச் சோ்ந்த தனியாா் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சி. மாா்கிரேட், தான் சேமித்து வைத்திருந்த ரூ. 2 ஆயிரத்தை முதல்வா் பொது நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணனிடம் திங்கள்கிழமை வழங்கினாா். அவரை ஆட்சியா் பாராட்டினாா். அதேபோல், விருதுநகரை சோ்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியா் வரதராஜப் பெருமாள் முதல்வா் பொது நிவாரண நிதிக்கு ரூ. 51 ஆயிரத்தை ஆட்சியரிடம் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

SCROLL FOR NEXT