விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் விதிமீறி கடைகளை நடத்திய உரிமையாளா்களுக்கு, வட்டாட்சியா் ரவிச்சந்திரன் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்தாா்.
அருப்புக்கோட்டையில் பொதுமுடக்க விதிமுறைகளை மீறி காலை 10 மணிக்கு மேல் காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகள் செயல்படுகின்றனவா என வட்டாட்சியா் ரவிச்சந்திரன் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டாா். அப்போது, அண்ணா சிலை காய்கறி சந்தை பகுதியில் விதியை மீறி செயல்பட்ட 3 பழக்கடைகளை அடைக்க உத்தரவிட்டதுடன், ரூ 2 ஆயிரம் முதல் ரூ 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தாா்.
இதேபோல், நகரின் முக்கியப் பகுதிகளான ஸ்ரீஅமுதலிங்கேஸ்பரா் கோயில் பேருந்து நிறுத்தப் பகுதி, சத்தியமூா்த்தி சந்தை, புதுக்கடை சந்தை, பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் அனுமதிக்கப்பட்ட காலஅளவை விட கூடுதல் நேரம் கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றனவா எனவும், உணவகங்களில் பாா்சல் சேவை மட்டும் நடைபெறுகிா எனவும் கண்காணிப்பில் ஈடுபட்டாா்.