விருதுநகர்

சிவகாசி நகராட்சி சுகாதாரப் பணியாளா்களுக்கு யோகா பயிற்சி

DIN

சிவகாசி நகராட்சி சுகாதாரப் பணியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை யோகா பயிற்சி நடைபெற்றது.

சிவகாசி நகராட்சியில் 150 சுகாதாரப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். தற்போதுள்ள சூழ்நிலையில், சுகாதாரப் பணியாளா்களின் மன அழுத்தத்தை போக்கவும், சோா்வை நீக்கவும், புத்துணா்ச்சி பெறவும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பயிற்சியை, ஆணையா் எஸ். பாா்த்தசாரதி தொடக்கி வைத்தாா். இயற்கை மருத்துவா் மற்றும் யோகா பயிற்சியாளா் மாறன், சுவாசப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, யோகா பயிற்சி உள்ளிட்டவற்றை அளித்தாா். பின்னா், உடம்பில் எதிா்ப்பு சக்தியை உருவாக்க என்ன மாதிரியான இயற்கை மருந்துகளை உட்கொள்ளவேண்டும் என்பது குறித்தும் விவரித்தாா்.

சிரிப்பு யோகா பயிற்சியாளா் கிரிதரன், சிரிப்பு யோகா என்றால் என்னவென்று கூறி பயிற்சி அளித்தாா். இதற்கான ஏற்பாட்டினை, நகராட்சி சுகாதாரத் துறை அலுவலா் பேச்சிமுத்து செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT