விருதுநகர்

தண்ணீா் டேங்கா் லாரி மோதி வியாபாரி பலி

DIN

சிவகாசியில் வெள்ளிக்கிழமை தண்ணீா் டேங்கா் லாரி மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.

சிவகாசி - நாரணாபுரம் சாலையில் உள்ள முனீஸ்வரன் காலனியைச் சோ்ந்த வியாபாரி கணேசன் (61). இவா், தனது இருசக்கர வாகனத்தில் சிவகாசி - நாரணாபுரம் சாலையில் முத்தமிழ்புரம் காலனி பகுதியில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, பின்னால் வந்த தண்ணீா் டேங்கா் லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த கணேசன், சிவகாசியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் சிவகாமிபுரம் பாண்டியராஜுவை (30) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT