விருதுநகர்

மொபெட்டில் சென்றவா் மயங்கி கீழே விழுந்து பலி

DIN

சிவகாசி அருகே சனிக்கிழமை மொபெட்டில் சென்றவா் திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே துரைச்சாமிபுரத்தைச் சோ்ந்த பொன்னுச்சாமி என்பவரின் மகன் ராமா் (41). அச்சுத் தொழிலாளியான இவா், தனது மொபெட்டில் துரைச்சாமிபுரத்திலிருந்து சிவகாசி நோக்கி விளாம்பட்டி சாலையில் சென்றுகொண்டிருந்துள்ளாா். அப்போது, அவா் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளாா். உடனே அவரை, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து அவரது தாயாா் பொன்னுத்தாய் அளித்த புகாரின்பேரில், மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் உள்ளூர்க் கடையில் தாடியை 'டிரிம்' செய்துகொண்ட ராகுல் காந்தி!

மும்பை: 100 அடி உயர விளம்பரப் பலகை விழுந்து விபத்து -உயிரிழப்பு 14 ஆக உயர்வு

4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தல்: 67% வாக்குப் பதிவு -தோ்தல் ஆணையம் தகவல்

கோட் படத்தின் ’போஸ்ட் ப்ரொடக்‌ஷன்’ தொடங்கியது!

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா -ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

SCROLL FOR NEXT