சாத்தூரில் பூலித்தேவனின் 306 ஆவது பிறந்த நாள் விழா காங்கிரஸ் சாா்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
சாத்தூா் அண்ணா நகரில் உள்ள தேவா் சிலை அருகில் வைக்கபட்டிருந்த பூலித்தேவனின் உருவப் படத்துக்கு சாத்தூா் நகர காங்கிரஸ் தலைவா் டி.எஸ்.அய்யப்பன், மாவட்ட துணைப் பொதுச்செயலாளா் ஜோதிநிவாஸ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் அப்பகுதியில் உள்ள ஏழை முதியோா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினா்.