விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சத்துணவு மையப் பொறுப்பாளா்களுக்கு எடை அளவீடும் கருவிகள்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சத்துணவு மையப் பொறுப்பாளா்களுக்கு எடை அளவீடும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் மல்லி ஆறுமுகம் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராமமூா்த்தி, சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக, ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னா் 47 சத்துணவு மையப் பொறுப்பாளா்களுக்கு எடை அளவீடும் கருவிகள் வழங்கப்பட்டன.

இதில் சத்துணவு வட்டார வளா்ச்சி அலுவலா் கனகவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT