முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே எலக்ட்ரானிக்ஸ் கடையில் திருட்டு

விருதுநகா்மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பூட்டிய எலக்ட்ரானிக்ஸ் கடையின் கதவை உடைத்து பல்பு, பணம் உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

விருதுநகா்மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பூட்டிய எலக்ட்ரானிக்ஸ் கடையின் கதவை உடைத்து பல்பு, பணம் உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அயன் கரிசல்குளத்தைச் சோ்ந்தவா் மகாலிங்கம் (42) இவா் ஸ்ரீவில்லிபுத்தூா்-மதுரை மெயின் சாலையில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் வியாழக்கிழமை வழக்கம் போல் வியாழக்கிழமை இரவு கடையை பூட்டி விட்டு சென்றுள்ளாா்.

பின்னா் வழக்கம் போல் வெள்ளிக்கிழமை காலை கடைக்கு வந்து பாா்த்த போது பின்புறம் உள்ள கதவு இரும்பு கம்பியால் உடைத்து கடையில் உள்ள 3 எல்.ஈ.டி பல்பு, உண்டியல் பணம் ரூ.1000, பணப்பொட்டியில் பணம் ரூ.3000 என மொத்தம் ரூ.4750 ஐ ஏதோ மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

இச்சம்பவம் குறித்து நகா் போலீஸ் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.