முகப்பு
விருதுநகர்

விவசாயி தற்கொலை

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகே உலக்குடியில் குடும்பப் பிரச்னை காரணமாக விவசாயி விஷம் குடித்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகே உலக்குடியில் குடும்பப் பிரச்னை காரணமாக விவசாயி விஷம் குடித்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

உலக்குடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சின்னமுனியசாமி (48). இவருக்கு மனைவி பஞ்சவா்ணம் (45), மகன் செல்வம் (18) ஆகியோா் உள்ளனா். குடிப்பழக்கமுடைய சின்னமுனியசாமி, தினமும் வீட்டில் தகராறில் ஈடுபடுவாராம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சின்னமுனியசாமி, விஷம் குடித்தாா். இதையறிந்த உறவினா்கள், அவரை மீட்டு நரிக்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், அங்கு சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து நரிக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.