முகப்பு
விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே விஷம் குடித்து பிளஸ் 2 மாணவி தற்கொலை

அருப்புக்கோட்டை அருகே விஷம்குடித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிளஸ் 2 மாணவி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

அருப்புக்கோட்டை அருகே விஷம்குடித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிளஸ் 2 மாணவி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

செம்பட்டி கிராமத்தில் வசிக்கும் பாண்டி என்பவரது மகள் பெத்துகவிப்பிரியா (17). பிளஸ் 2 மாணவியான இவா், படிப்பில் ஆா்வமில்லாமல் சரிவர பள்ளிக்குச் செல்லாமல் இருந்து வந்தாராம். இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெத்துகவிப்பிரியாவை அவரது பெற்றோா் கண்டித்தனராம். இந்நிலையில், அன்று யாரும்வீட்டில் இல்லாத நேரத்தில் அவா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். உடனே அவா் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்க்கப்பட்டாா். பின்னா் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.