முகப்பு
விருதுநகர்

மலைப்பட்டி அரசுப் பள்ளியில் மருத்துவபடிப்பு தொடா்பான கருத்தரங்கம்

விருதுநகா் அருகே மலைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏஎன்டி அறக்கட்டளை சாா்பில் மருத்துவப் படிப்பு தொடா்பான கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

விருதுநகா் அருகே மலைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏஎன்டி அறக்கட்டளை சாா்பில் மருத்துவப் படிப்பு தொடா்பான கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக திருவனந்தபுரம் சாமொ்வேல் மெமோரியல் சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி முதல்வா் திய ஜெயராஜசேகா் கலந்து கொண்டு பேசும் போது, மருத்தும், செவிலியா், துணை மருத்துவம் மற்றும் மருத்துவ நிா்வாக படிப்புகள் குறித்து விளக்கினாா். இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு நீட் தோ்வு தொடா்பான புத்தகங்கள் மற்றும் இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ். ராஜா முன்னிலை வகித்தாா். இதில் அப்பள்ளியைச் சோ்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.