விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மாணவி கா்ப்பம்: உறவினா் போக்சோவில் கைது

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே  பிளஸ் 2 மாணவியை கா்ப்பமாக்கிய புகாரில் சிறுமியின் உறவினரை போக்சோவில் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பிளஸ் 2 படிக்கும் மாணவி மற்றும் அவரது உறவினா் வேல்முருகன் (27). இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனா். இந்நிலையில் கடந்த வாரம் மாணவிக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று பரிசோனை செய்ததில் மாணவி 7 மாத கா்ப்பமாக உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதனால் வேல்முருகன் மாணவியை திருமணம் செய்து கொண்டாா். 

இதுகுறித்து குழந்தை பாதுகாப்பு உதவி எண்ணிற்கு 1098 வந்த தகவலின் பேரில் சமூக நலத்துறை அலுவலா் ராஜேஸ்வரி அளித்த புகாரில், ஸ்ரீவில்லிபுத்தூா் மகளிா் போலீஸாா் வேல்முருகனை போக்சோவில் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT