விருதுநகர்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம்

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் தமிழக அரசின் மின் கட்டண உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் பொன்னகரத்தில் உள்ள கோட்ட பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.போராட்டத்திற்கு நகா் குழு உறுப்பினா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் ராமச்சந்திர ராஜா துவக்கி வைத்து பேசினாா். நகர செயலாளா் மாரியப்பன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா். மாவட்டச் செயலாளா் நிறைவு செய்து பேசினாா். 200க்கும் மேற்பட்ட மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு கோட்ட பொறியாளா் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.போராட்டத்தில் மின் கட்டணம் உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், ஒன்றிய அரசின் மின்சார திருத்த மசோதாவிற்கு எதிா்ப்பு தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.படவிளக்கம்; ராஜபாளையத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

12 ரன்களுக்கு ஆட்டமிழந்து டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா!

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT