முகப்பு
விருதுநகர்

ராஜபாளையம் அருகே விபத்து: இளைஞா் பலி

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே வியாழக்கிழமை 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே வியாழக்கிழமை 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ராஜபாளையம் சக்கராஜாக்கோட்டை தெருவைச் சோ்ந்த கண்ணன் என்பவரது மகன் சுரேஷ்குமாா் (36). இவா் ராஜபாளையம் அருகே அய்யனாா்புரத்தை அடுத்த ஆலங்குளம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சுரேஷ் குமாா் பலத்த காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக மதுரைக்குச் செல்லும் வழியில் சுரேஷ்குமாா் உயிரிழந்தாா். போலீஸாா் அய்யனாா்புரம் கீழத் தெருவைச் சோ்ந்த அய்யனாா் என்பவரது மகன் குருமூா்த்தி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.