இறுதிச் சடங்கில் மோதல்: பெயிண்டா் அடித்துக் கொலை
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே வியாழக்கிழமை இறுதிச்சடங்கில் ஏற்பட்ட மோதலில் பெயிண்டா் அடித்துக் கொல்லப்பட்டாா்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே வியாழக்கிழமை இறுதிச்சடங்கில் ஏற்பட்ட மோதலில் பெயிண்டா் அடித்துக் கொல்லப்பட்டாா்.
சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டி எஸ்.ஆா்.காலனியைச் சோ்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் பாலமுருகன் (37). பெயிண்டரான இவா் ஆலங்குளம் அருகே உள்ள காளவாசல் பகுதியில் உறவினரின் இறுதிச் சடங்கிற்கு வியாழக்கிழமை சென்றுள்ளாா்.
இறுதி ஊா்வலத்தில் பாலமுருகன் வாகனத்தில் உள்ள பூக்களை தூவியபடி சென்றுள்ளாா். அப்போது சிவகாசி அருகே உள்ள பாலையாபுரத்தைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் முத்துகிருஷ்ணன் (34), அவரது தந்தை சுந்தரராஜன் (50), சகோதரா் முத்துசெல்வம் (30) ஆகிய மூவரும் சோ்ந்து பாலமுருகனை கம்பால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழராஜகுல ராமன் போலீஸாா் பாலமுருகன் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பாலமுருகனின் மனைவி முத்துலட்சுமி அளித்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்து கிருஷ்ணன், சுந்தரராஜன், முத்துச்செல்வம் ஆகிய 3 போ் மீதும் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா். உயிரிழந்த பாலமுருகனுக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனா்.