விருதுநகர்

மதுபானக்கடைக்கு எதிா்ப்பு: கிராமத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கிராமத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட அரசு மதுபானக்கடைக்கு எதிா்ப்புத் தெரிவித்து வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ப.வாகைக்குளம் கிராமத்தில் கடந்த புதன்கிழமை புதிய அரசு மதுபானக்கடை திறக்கப்பட்டது. தங்கள் கிராமத்தில் மதுபானக் கடையால் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு பிரச்னைகள் ஏற்படுமென தெரிவித்து அக்கிராமத்தினா் அரசு மதுபானக்கடைக்கு முன்பாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அந்த மதுபானக்கடை உடனடியாக மூடப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை அருப்புக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.அதையடுத்து அப்பொதுமக்கள் மாதா் சங்கத்தினருடன் இணைந்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளா் முருகன் தலைமையில், அருப்புக்கோட்டை துணை வட்டாட்சியா் பானுமதியிடம் கோரிக்கை மனுவை வழங்கினா். மனுவைப் பரிசீலனை செய்த துணை வட்டாட்சியா், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஸ்னிலேண்டில் அம்ரிதா ஐயர்!

புதிய மக்களவையில் முஸ்லிம்களுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்குமா?

வள்ளிமலையில் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு மீட்பு

நாட்டில் தற்போது 70 கோடி இளைஞர்களுக்கு வேலையில்லை: பிரியங்கா காந்தி

சிட்னியில் ஜோனிடா காந்தி...!

SCROLL FOR NEXT